புதுச்சேரி: இரண்டு நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

புதுச்சேரியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் நாளை (திங்கள், செவ்வாய்) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாநில கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

Update: 2021-11-07 13:42 GMT

புதுச்சேரியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் நாளை (திங்கள், செவ்வாய்) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாநில கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. தமிழகத்தில் அருகாமையில் உள்ள கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களிலும் கனமழை பெய்துள்ளது. இதனிடையே கடலூர் அருகாமையில் உள்ள புதுச்சேரி, காரைக்காலில் கனமழை பெய்கிறது.

இந்நிலையில், புதுச்சேரியில் தொடர்மழை பெய்து வருவதால் நாளை மற்றும் நாளை மறுநாள் (திங்கள், செவ்வாய்) பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக அம்மாநில கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். மேலும், ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்புக்கு நாளை முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், மழையை பொறுத்து பின்னர் தேதி அறிவிக்கப்படும் என கூறியுள்ளார்.

Source: Daily Thanthi

Image Courtesy:India Today


Tags:    

Similar News