காரைக்காலில் பதற்றமான வாக்குச்சாவடிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு.!

voting booth karikaal

Update: 2021-03-08 13:54 GMT

புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறுகிறது. இதனையொட்டி அம்மாநிலத்தில் தேர்தலுக்காண பணிகளை தேர்தல் அதிகாரிகள் செய்து வருகின்றனர். அந்த வகையில், காரைக்காலில் பதற்றமான 25 வாக்குச்சாவடிகளுக்கு கூடுதல் பாதுகாபு அளிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அர்ஜூன் சர்மா கூறியுள்ளார்.

காரைக்கால் புதிய பேருந்து நிலையத்தில், தேர்தல் அதிகாரிகள் சார்பில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாதிரி வாக்குச்சாவடி அமைக்கப்பட்டது.


 



இந்த வாக்குச்சாவடி மையத்தை காரைக்கால் ஆட்சியரும், தேர்தல் அதிகாரியுமான அர்ஜூன்சர்மா திறந்து வைத்தார். இதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மாதிரி வாக்குச்சாவடிக்கு வருகை புரிந்தால், யாருக்கு வாக்களித்தோம் மற்றும் மின்னறு வாக்காளர் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்யும் முறை உள்ளிட்டவைகளை அறிந்து கொள்ளலாம்.

மேலும் பதற்றமான வாக்குச்சாவடி மையங்களில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணிகளில் அமர்த்தப்படுவார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

Similar News