புதுச்சேரியை சிறந்ததாக உருவாக்கிக் கொண்டிருக்கிறோம் - கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன்!

சிறந்த புதுச்சேரியை நாங்கள் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம் என்று கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியிருக்கிறார்.

Update: 2022-11-01 03:54 GMT

புதுச்சேரியில் தற்போது சுகாதாரத் துறையில் உள்ள குறைபாடுகள் மூன்று மாதங்களில் சரி செய்யப்படும் என்றும் புதுச்சேரியை நாங்கள் சிறந்ததாக உருவாக்கிக் கொண்டிருக்கிறோம் என்றும் புதுச்சேரி துணை நிலை கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்து இருக்கிறார். புதுச்சேரி அரசு பொது மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியின் போது கூறுகையில், பொதுமக்களுக்கு 24 மணி நேரமும் கிடைக்க வேண்டிய மருத்துவ சேவைகள் தொடர்ந்து கிடைக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.


சுகாதாரத் துறையில் உள்ள பிரச்சனைகள் அனைத்தும் சரி செய்யப்படும் கூடிய விரைவில் மூன்று மாதங்களுக்குள் என்றும் தெரிவித்து இருக்கிறார். ஏற்கனவே ஐந்து கோடி மதிப்பீட்டில் ஆஞ்சியோ கிராம் கருவி வாங்கப்பட்டு இருக்கிறது. அது ஒன்றை மாதத்தில் செயல்பாட்டிற்கு வரும் இதைப்போன்ற ஸ்கேன் கருவிகளும் வாங்கும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.


மருத்துவ துறையுடன் நாளை நான் கலந்த ஆலோசனை செய்ய இருக்கிறேன். அப்பொழுது என்னென்ன குறைபாடுகள் இருக்கின்றது? என்பது குறித்து தீர்வுகள் எடுக்கப்படும். அவற்றை சரி செய்ய எங்கள் தலைமையிலான அரசு நிச்சயம் முயற்சி செய்யும் என்றும், கருத்து தெரிவித்து இருக்கிறார். மேலும் புதுச்சேரியை சிறந்ததாக நாங்கள் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம் என்றும், புதுச்சேரி துணை நிலை கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்திருக்கிறார.

Input & Image courtesy:Thanthi News

Tags:    

Similar News