குளிக்கபோன மகன் உயிரிழந்ததை கேள்விப்பட்ட தாய் மரணம்! புதுச்சேரியில் பரிதாபம்!

ஆற்றில் குளிக்கப் போன மகன் காணாமல் போன தகவலை கேள்விப்பட்டு மாரடைப்பால் மயங்கி விழுந்த தாயும், மகனும் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர்.

Update: 2021-09-22 01:03 GMT

ஆற்றில் குளிக்கப் போன மகன் காணாமல் போன தகவலை கேள்விப்பட்டு மாரடைப்பால் மயங்கி விழுந்த தாயும், மகனும் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர்.

புதுச்சேரி, சண்முகாபுரம் நெசவாளர் பகுதியைச் சேர்ந்தவர் வேலு. இவரது மகன் ஜீவா. இவர் நேற்று முன்தினம் காசநோய் மருத்துவமனை அருகே உள்ள ஆற்றில் நண்பர்களுடன் மீன்பிடிக்க சென்றுள்ளனர். அப்போது குளிப்பதற்காக ஜீவா தனியாக ஆற்றில் இறங்கியுள்ளார். சில நிமிடங்களில் ஆழமான பகுதிக்கு சென்ற ஜீவா நீரில் மூழ்கியுள்ளார். இதனால் சக நண்பர்கள் உடனடியாக தவளக்குப்பம் காவல்நிலையத்திற்கு தகவலை தெரிவித்துள்ளனர்.

அந்த தகவலை தொடர்ந்து போலீஸ் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ஜீவாவை தேடும் பணியில் ஈடுபட்டனர். இரவு நேரமாகியும் கிடைக்கவில்லை. இதனிடையே ஜீவா ஆற்றில் மூழ்கிவிட்ட செய்தியை அவரது தாய் முத்துலட்சுமி கேள்விப்பட்டு மயக்கம் அடைந்துள்ளார். அவருக்கு ஏற்கனவே இதயநோய் இருந்துள்ளது.

இதனை தொடர்ந்து முத்துலட்சுமியை மீட்ட உறவினர்கள் அவரை கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று காலை ஜீவாவின் சடலம் ஆற்றங்கரை பகுதியில் ஒதுங்கியிருப்பதாக கூறப்படுகிறது. இதனையடுத்து சடலத்தை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்கு கதிர்காமம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதே மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த முத்துலட்சுமியும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மகனும், தாயும் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அவர்களின் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Source, Image Courtesy: Vikatan


Tags:    

Similar News