திண்டுக்கல் அருகே கருப்புசாமி கோயிலில் சிலைகள் உடைப்பு!

Update: 2022-01-12 05:18 GMT

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட வடமதுரை, செங்குறிச்சி அருகே திருமலைக்கேணி அடிவாரத்தில் கருப்புசாமி கோயில் அமைந்துள்ளது. அப்பகுதியை சேர்ந்தவர்கள் கோயிலில் தினமும் பூஜையிட்டு வழிபாடு நடத்தி வருவது.

இந்நிலையில், கடந்த 7ம் தேதி இரவு கோயிலுக்குள் நுழைந்த மர்ம நபர்கள் சுவாமி சிலைகளை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். அதற்கு அடுத்த நாள் கோயிலுக்கு சென்றவர்கள் பார்த்தவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

சிலைகள் அனைத்தும் உடைந்து கிடந்துள்ளது. இது குறித்து வடமதுரை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரை தொடர்ந்து சிலைகளை சேதம் ஏற்படுத்தியவர்களை போலீசார் தேடி வருகின்றனர். தொடர்ந்து தமிழகத்தில் இந்து கோயில்களின் சிலைகள் மட்டும் சேதப்படுத்தப்பட்டு வருகிறது. 

Source, Image Courtesy: Dinamalar



Tags:    

Similar News