சிறுமிக்கு பாலியல் தொல்லை; மதபோதகர் அதிரடி கைது!

Update: 2022-01-21 02:50 GMT

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த மதபோதகரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம், ஊட்டியை சேர்ந்தவர் சூரி ஸ்டீபன் 54, இவர் ஒரு சர்ச்சின் மதபோதகராக உள்ளார். இதனிடையே 13 வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருவருக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளார். இது பற்றி சிறுமியின் பெற்றோர்களுக்கு தெரியவந்துள்ளது.

இதனிடையே சிறுமியின் பெற்றோர் ஊட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரை தொடர்ந்து சூரி ஸ்டீபனை 'போக்சோ' சட்டத்தில் போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். மதபோதகர்கள் தமிழகத்தில் அடிக்கடி அத்துமீறும் சம்பவங்கள் நிகழ்ந்து வருகிறது. குறிப்பாக சிறுமிகளிடம் மதபோதகர்கள் தவறு செய்வது அதிகரிக்கிறது. அவர்கள் மீது கடுமையான நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும் என்பது அனைவரின் விருப்பமும் ஆகும்.

Source, Image Courtesy: Dinamalar

Tags:    

Similar News