பாதுகாக்கப்பட்ட பகுதி.. கங்கை கொண்ட சோழபுர கோவிலில் கட்டுமானங்களுக்கு தடை!

Update: 2022-02-11 13:00 GMT

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் பாதுகாக்கப்பட்ட பகுதியாக இருப்பதால் அங்கு கட்டுமானங்கள் மேற்கொள்வதற்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக தடை விதித்துள்ளது.

கங்கை கொண்ட சோழபுரம் கோயிலில் புத்தக நிலையம் மற்றும் உணவகம், கழிப்பறைகள் உள்ளிட்டவைகளுக்கான கட்டுமானப் பணியில் தொல்லியல் துறை திட்டமிட்டிருந்தது. ஆனால் இதற்கு தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கோவில் வளாகத்தில் விதிகளை மீறி கட்டுமானங்கள் கட்டக்கூடாது எனவும், சொந்த விதிகளை தொல்லியல் துறையே மீறுவதாக கூறி தடை விதித்து அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கு இந்துக்கள் அனைவரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

Source, Image Courtesy: Polimer

Tags:    

Similar News