வேலூர்: ஜூஸ் கடையை மசூதியாக மாற்ற முயற்சி!

Update: 2022-02-26 10:34 GMT

வேலூர்: மெயின் ரோட்டில் அமைந்திருந்த ஜூஸ் கடை ஒன்றை, மசூதியாக மாற்ற முயற்சி நடப்பதாக இந்துமுன்னணி குற்றச்சாட்டு எழுப்பியுள்ளது.


தமிழகத்தில் கடந்த 8 மாதங்களாக பொது இடங்களில் ஜெபக் கூடங்கள் மற்றும் சர்ச்சுகள் எழுப்பப்பட்டு வருகிறது. இதன் வரிசையில்,

வேலூர் மாவட்டத்தில் காந்தி ரோடு என்னும் பொதுமக்கள் பெரும்பாலும் கூடும் பகுதியில், ஜூஸ் கடை ஒன்றை மசூதியாக மாற்ற முயற்சி நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இக்குற்றச்சாட்டை அறிந்த இந்து முன்னணி அமைப்பு சம்பவ இடத்திற்கு விரைந்து  போராட்டம் நடத்தியது. பின்னர் இதுகுறித்து கலெக்டர் அலுவலகத்திலும் நேற்று  பேச்சுவார்த்தை நடத்தியது.


இதுகுறித்து இந்து முன்னணி வெளியிட்ட குறிப்பில் : வேலூர் மாவட்டம் காந்தி ரோட்டில் இஸ்லாமியர்கள் ஜூஸ் கடையை மசூதியாக மாற்ற முயற்சி இந்துமுன்னணி போராட்டம் கலெக்டர் அலுவலகத்தில் இன்று பேச்சுவார்த்தை.

Similar News