கன்னியாகுமரி : சிவாலயம் அருகில் வடிகால் அமைக்கும் பணியில் சுணக்கம்! இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்!

Update: 2022-02-26 10:54 GMT

கன்னியாகுமரி : சிவாலயம் அருகில் வடிகால் அமைக்கும் பணியில்  சுணக்கம் ஏற்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் வேதனை அடைந்து வருகின்றனர். 


தமிழகத்தில் கடந்த 8 மாதங்களாக அரசின் பொதுப்பணிகள் நடப்பதில் தொய்வு ஏற்படுவதாக பலரும் குற்றச்சாட்டு எழுப்புகின்றனர்.

இதன் வரிசையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மேல்புறம் என்னும் கிராமத்தில், திக்குறிச்சி மகாதேவர் என்ற சிவாலயம் இருந்து வருகிறது. அச் சிவாலயத்திற்கு அன்றாடம் பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர். இந்நிலையில்  அச் சிவாலயத்திற்கு அருகில் அரசு சார்பில் வடிகால் அமைக்கும் பணிகள் பல நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. ஆனால் இன்றும் ஆப் பணிகள் சரிவர முடிந்ததாக தெரியவில்லை. இதனால் அப்பகுதி மக்களும், கோயிலுக்கு வரும் பக்தர்களும் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.


இச்செய்தி அறிந்த இந்து முன்னணி அமைப்பு சம்பவ இடத்துக்கு விரைந்தது " பணிகளை விரைந்து முடிக்க" போராட்டம் நடத்தப்பட்டது.

இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

Similar News