கன்னியாகுமரி: தி.மு.க பிரமுகரால் தாக்கப்பட்ட கோயில் அர்ச்சகர் மருத்துவமனையில் அனுமதி!

Update: 2022-03-11 08:38 GMT

கன்னியாகுமரி :  தி.மு.க பிரமுகரால் தாக்கப்பட்ட கோயில் அர்ச்சகர், மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகிறார். இச்சம்பவம் கன்னியாகுமரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தமிழகம் முழுவதும் தி.மு.க ஆட்சி பொறுப்பேற்றது முதல்,இந்துமத உணர்வாளர்கள் தாக்குதலுக்குள்ளாவது வழக்கமாகி வருகிறது. இதனால் பல இடங்களில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு வருகிறது.


இதன் வரிசையில்:கடந்த ஆறாம் தேதி கன்னியாகுமரி மாவட்டம், பண்டாரபரம்பு என்னும் பகுதியில் வசித்து வரும்  ஸ்ரீ சசிதரன் என்ற கோயில் அர்ச்சகரை, அர்ஜுனன் என்ற தி.மு.க பிரமுகர் கடுமையாக தாக்கியுள்ளார். இதனால் சசிதரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் பாதிக்கப்பட்ட சசிதரன் முன்னாள் ராணுவ அதிகாரி என்றும், தற்போது இவர் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர் என்றும் தகவல் வெளிவந்துள்ளது.


தமிழகத்தில் மட்டும் தேசியத்தையும் தெய்வீகத்தையும் பின்பற்றுபவர்களுக்கு, சசிதரனின் நிலைமைதான் தொடர்ந்து வருகிறது. 

Twitter

Similar News