பழனியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்!

Update: 2022-03-12 12:39 GMT

பழனி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் இன்று (மார்ச் 12) துவங்கியுள்ளது. இதில் மிகவும் முக்கிய நிகழ்ச்சியாக தேரோட்டம் வருகின்ற 18ம் தேதி நடைபெறுகிறது.

இதில் பழனியில் கொண்டாடப்படும் முதன்மை திருவிழா பங்குனி உத்திரம். இந்த விழாவிற்கு ஈரோடு மாவட்டம், கொடுமுடியில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் தீர்த்தம் எடுத்து வந்து முருகனுக்கு அபிஷேகம் செய்வர். அதன்படி இந்த விழாவானது இன்று காலை திருஆவினன்குடி கோயிலில் கொடியேற்றத்துடன் நடைபெற்றது. கொடியேற்றப்படுவதால் கணபதி பூஜை, பூர்ணாகுதி உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Source: Dinakaran

Image Courtesy: India Mart

Tags:    

Similar News