கிருஷ்ணகிரி அருகே கிராமத்தில் சட்டவிரோத ஜெபக்கூடம்: இந்து முன்னணி புகாரால் விரட்டியடிப்பு!

Update: 2022-03-14 11:16 GMT

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வேலம்பட்டி என்ற கிராமத்தில் சட்ட விரோதமாக ஜெபக்கூடம் நடத்தி வந்ததை இந்து முன்னணி காவல் நிலையத்தில் புகார் அளித்து மூடியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி தாலுகாவிற்குட்பட்டது வேலம்பட்டி என்ற கிராமம். அந்த கிராமத்தில் கிறிஸ்தவர்கள் சட்டத்திற்கு புறம்பாக கடை முன்பாக ஜெபக்கூடத்தை நடத்தி வந்துள்ளனர்.

இது பற்றி தகவல் அறிந்த இந்து முன்னணி நிர்வாகிகள், வட்டாச்சியர், மற்றும் நாகரசம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரை தொடர்ந்து ஜெபக்கூடம் நடத்தி வந்தவர்கள் விரட்டியடிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source, Image Courtesy: Twiter

Tags:    

Similar News