பங்குனி உத்திரம் அன்று விடுமுறை: இந்து முன்னணி கோரிக்கை மனு!

Update: 2022-03-16 11:09 GMT

தூத்துக்குடி மாவட்டத்தில் பங்குனி உத்திர திருநாளில் விடுமுறை அளிக்கக்கோரி இந்து முன்னணி சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

முருக பெருமானுக்கு மிகவும் உகந்த நாளாக பங்குனி உத்திரம் பார்க்கப்படுகிறது. இத்தகைய நாளில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மிகப்பிரமாண்டமான முறையில் திருவிழா நடைபெறும். இதனை காண்பதற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூரில் முகாமிடுவது வழக்கம்.

இது போன்ற திருநாளில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

Source, Image Courtesy: Twiter

Tags:    

Similar News