சாலையை ஆக்கிரமித்து கட்டப்படும் மசூதியை தடுத்து நிறுத்திய இந்து முன்னணி!

Update: 2022-03-18 11:59 GMT

பொதுமக்கள் பயன்படுத்தும் சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட மசூதியின் கட்டுமானத்தை இந்து முன்னணி தடுத்து நிறுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் சாலையை ஆக்கிரமித்து சட்டத்திற்கு விரோதமாக மசூதி ஒன்று கட்டப்பட்டு வந்தது. இதனை கவனித்த இந்து முன்னணி நிர்வாகிகள் உடனடியாக நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் அதிகாரிகளிடம் புகார் அளித்தனர்.

புகாரை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்ட அதிகாரிகள் உடனடியாக கட்டுமான வேலையை தடுத்து நிறுத்தினர். பொதுமக்கள் பயன்படுத்தும் சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட மசூதி தடுத்து நிறுத்தியதற்கு இந்து முன்னணி நிர்வாகிகளே காரணம் என்று பொதுமக்கள் பாராட்டியுள்ளனர்.

Source, Image Courtesy: Twiter

Tags:    

Similar News