வேலூரில் ஒரு நிர்பயா சம்பவம்: வாய் திறக்காத அடிமை போராளிகள்!

Update: 2022-03-25 10:23 GMT

வேலூர் காட்பாடியில் உள்ள தனியார் மருத்துவ மாணவியும் அவரது ஆண் நண்பரும் இரவு திரையங்கில் படம் பார்த்துவிட்டு மீண்டும் மருத்துவமனைக்கு திரும்பி கொண்டிருக்கும்போது ஷேர் ஆட்டோவில் ஏறியுள்ளனர்.

ஆனால் அந்த ஆட்டோவில் இருந்தவர்கள் கத்தி முனையில் அவர்களை கடத்தி சென்று மருத்துவ மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அது மட்டுமின்றி அவர்களிடம் இருந்த பணம் மற்றும் நகைகளை பறித்து சென்றுள்ளனர். இந்த சம்பவம் வெளியில் தெரிந்தால் அவமானம் என்று நினைத்த மாணவி புகார் எதுவும் தராமல் இருந்துள்ளார்.

Full View

இதன் பின்னர் பாலியல் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் அடுத்த நாள் சென்றபோது போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது நடந்த சம்பவம் பற்றி தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் புகார் அளிக்க சொல்லியுள்ளனர். இதன் பின்னர் குற்றவாளிகள் அனைவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆனால் இவ்வளவு பெரிய கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம் மருத்துவ மாணவிக்கு அதுவும் தமிழகத்தில் நடைபெற்றுள்ளது. பெண் போராளிகள் என்று சொல்லிக்கொள்ளும் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி மற்றும் அறிவாலய அடிமைகளாக இருக்கும் சுந்தரவள்ளி போன்றவர்கள் இன்னும் பலர் மவுனமாக இருப்பது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. டெல்லியில் நடந்தால் மட்டும்தான் இவர்கள் போராட்டம் நடத்துவார்களா, திமுக ஆட்சியில் நடந்தால் மவுனம் காப்பது ஏன் என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியிலும் எழுந்துள்ளது.

Source, Image Courtesy: Thamarai Tv

Tags:    

Similar News