விருதுநகரில் மற்றொரு அதிர்ச்சி: கல்லூரி மாணவி ரவுடிகளால் கூட்டு பாலியல் பலாத்காரம்: மூடி மறைக்கும் போலீஸ்!

Update: 2022-03-27 13:33 GMT

விருதுநகர் மாவட்டத்தில் கல்லூரி மாணவி ஒருவர் ரவுடி கும்பலால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு அதனை மூடி மறைக்கும் வேலையில் போலீசார் ஈடுபடுவதாக புகார்கள் தற்போது எழுந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் விருதுநகரில் திமுக பிரமுகர் மற்றும் அவரது கூட்டாளிகள் இளம் பெண் ஒருவரை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து அதனை வீடியோ எடுத்து மிரட்டி வந்தனர். இது பற்றி அந்த இளம்பெண் புகார் அளித்த பின்னர் உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. இந்த சம்பவத்திற்கு பாஜக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது.

இந்நிலையில், விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை பாளையம்பட்டியைச் சேர்ந்த ஒரு கல்லூரி மாணவி ஒருவர் தனது காதலருடன் கடந்த 23ம் தேதி மூக்கையூர் கடற்கரைக்கு சென்றதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த 5 பேர் கொண்ட ரவுடி கும்பல் காதலனை தாக்கிவிட்டு இளம்பெண்ணை மறைவான இடத்திற்கு தூக்கிச்சென்று கூட்டு பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதனை செல்போனில் வீடியோவாக பதிவு செய்த ரவுடி கும்பல் மாணவியின் செல்போன், நகை உள்ளிட்டவைகளை பறித்து சென்றுள்ளது. இந்த சம்பவத்திற்கு பின்னர் மிகவும் மன வருத்தத்தில் இருந்த காதலன் விஷம் அருந்தியுள்ளார். மாணவி விருதுநகர் எஸ்.பி., மற்றும் ராமநாதபுரம் டிஐஜியிடம் புகார் அளித்துள்ளார்.

இதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட ரவுடி கும்பலை பிடிப்பதற்காக போலீசார் சென்றபோது ஒரு ரவுடி போலீசாரை அரிவாளால் வெட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது. அதில் பத்மேஸ்ரன், தினேஷ்குமார், அஜீத் உள்ளிட்டோரை கைது செய்தனர். ஆனால் அவர்கள் மீது ராமநாதபுரம் போலீசார் பாலியல் பலாத்காரம் சம்பந்தமான வழக்கு பதிவு செய்யவில்லை. மாறாக திருட்டு வழக்கு மட்டுமே பதிவு செய்துள்ளனர். எங்கே பாலியல் பலாத்காரம் வழக்குப்பதிவு செய்தால் திமுக அரசுக்கு மீண்டும் கெட்டப்பெயர் வந்துவிடும் என்ற நோக்கத்தில் போலீசார் மூடி மறைத்துள்ளனர். இந்த வழக்கு தற்போது சூடுப்பிடிக்க தொடங்கியுள்ளது.

Source: Dinamalar

Image Courtesy: The Daily Guardian

Tags:    

Similar News