ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் திருவிழா: பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கிய இந்து முன்னணி அமைப்பு!

Update: 2022-03-30 12:04 GMT

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருள்மிகு பெரிய மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழாவை முன்னிட்டு இந்து முன்னணி சார்பில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் இந்து கோயில்களில் நடைபெறும் திருவிழாக்கள் மற்றும் பூஜைகளுக்கு தேவையான உதவிகளை இந்து முன்னணி அமைப்பு பல்வேறு வகையில் வழங்கி வருகிறது. அதில் திருவிழாவில் கலந்து கொள்பவர்களுக்கு சாப்பாடு மற்றும் குடிநீர் உள்ளிட்டவைகள் அடங்கும்.

அதே போன்று தற்போது விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருள்மிகு பெரிய மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழாவை முன்னிட்டு இந்து முன்னணி சார்பில் அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதம் வழங்கப்பட்டுள்ளது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source, Image Courtesy: Twiter

Tags:    

Similar News