ஆதிதிராவிட நலத்துறை அதிகாரி காரில் கட்டு, கட்டாக பணம் பறிமுதல்: லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் அதிரடி!

Update: 2022-03-30 13:05 GMT

சென்னைக்கு சென்று கொண்டிருந்த ஆதி திராவிட நலத்துறை அதிகாரியின் காரை சோதனை செய்ததில் சுமார் ரூ.40 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிகாரியிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருச்சியில் ஆதிதிராவிடம் நலத்துறை அலுவலராக பணியாற்றி வருபவர் சரவணக்குமார். இவர் சென்னைக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அவரது காரில் பல லட்சம் பணம் எடுத்து செல்வதாக விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் சென்றது. இதனை தொடர்ந்து ஏ.டி.எஸ்.பி. தேவநாதன் தலைமையிலான போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

கள்ளக்குறிச்சி அருகே சரவணக்குமார் கார் வந்தபோது போலீசார் அதிரடியாக நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது காரில் கட்டு, கட்டாக பணம் இருந்ததை பார்த்து போலீசார் அதிர்ச்சியடைந்தனர். இதனை தொடர்ந்து பணத்தை பறிமுதல் செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு அலுவலர் காரில் 40 லட்சம் பணம் பிடிப்பட்டிருப்பது உயர் அதிகாரிகளிடம் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Source, Image Courtesy: Dinamalar

Tags:    

Similar News