கிறிஸ்தவ பள்ளிக்கு ஆட்டு மந்தைகளை போன்று 'குழந்தைகளை' அடைத்து சென்ற ஆட்டோ பறிமுதல்!

Update: 2022-04-02 04:38 GMT

தென்காசி அருகே கிறிஸ்தவ பள்ளிக்கு ஆட்டோவில் அளவுக்கு அதிகமான குழந்தைகளை அடைத்து கொண்டு சென்ற ஆட்டோ டிரைவர் மீது போலீசார் வழக்குப்திவு செய்து, ஆட்டோவை பறிமுதல் செய்துள்ளனர். தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் அருகே ஆவுடையனூர் உள்ளது. அங்கு டி.டி.டி.ஏ. சி.எஸ்.ஐ கிறிஸ்தவ பள்ளி செயல்பட்டு வருகிறது. அப்பள்ளிக்கு சுற்று வட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி வருகின்றனர். அது போன்று பள்ளிக்கு செல்வதற்காக ஆட்டோ ஏற்பாடு செய்துள்ளனர்.

அதன்படி ஒரு ஆட்டோவில் அதிகபட்சமாக மூன்று பேர் அமர்ந்து செல்லலாம். ஆனால் அதிகளவில் குழந்தைகளை அடைத்து மூச்சுக்கூட விடுவதற்கு இடமின்றி கொண்டு செல்லப்பட்டனர். இதனை அங்குள்ள நபர் ஒருவர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து பொதுமக்கள் சேர்ந்து கல்வித்துறை மற்றும் போலீசாருக்கு புகார் அளித்தனர்.

அதன்படி எஸ்.பி. கிருஷ்ணராஜ் உத்தரவிட்டதை தொடர்ந்து பாவூர்சத்திரம் போலீசார் ஆட்டோ டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்து ஆட்டோவை பறிமுதல் செய்தனர். இதற்கு காரணமான பள்ளி நிர்வாகம் மீது உடனடி நடவடிக்கை தேவை என பொதுமக்களும் கோரிக்கை வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source, Image Courtesy: Dinamalar

Tags:    

Similar News