திருப்பூரில் பரபரப்பு: ஆர்.டி.ஓ. பூட்டிய பூட்டை உடைத்து கிறிஸ்தவர்கள் ஜெபம்!

Update: 2022-04-02 05:38 GMT

பிரச்சனை காரணமாக ஆர்.டி.ஓ. பூட்டியிருந்த சர்ச் பூட்டை கிறிஸ்தவர்களின் ஒரு தரப்பினர் உடைத்து ஜெபம் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம், அவிநாசி சாலை ராமையா காலனியில் ஏ.ஜி. சர்ச் அமைந்துள்ளது. அங்கு பணியாற்றி வந்த மதபோதகர் அலெக்சாண்டர் மீது ஒரு பிரிவினர் புகார் கூறியிருந்தனர். இதில் மற்றொரு மதபோதகர் மீது பாலியல் புகாரும் கூறப்பட்டது. இதன் காரணமாக சர்ச் பூட்டப்பட்டு ஆர்.டி.ஓ. தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கடந்த மார்ச் 30ம் தேதி இரவு 7 மணியளவில் திடீரென்று சர்ச்சின் பூட்டு உடைக்கப்பட்டு மதபோதகர் அலெக்சாண்டர் தரப்பை சேர்ந்தவர்கள் உள்ளே புகுந்து ஜெபம் செய்ய ஆரம்பித்தனர். இதனை அறிந்த மற்றொரு பிரிவினர் ஜெபம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் குதித்தனர். இதனால் சம்பவ இடத்திற்கு ஆர்.டி.ஓ. பண்டரிநாத் மற்றும் போலீசார் விரைந்து சென்று இரண்டு தரப்பினரிடையேயும் பேச்சு வார்த்தை நடத்தினர். இப்பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் மீண்டும் நள்ளிரவு சர்ச் பூட்டப்பட்டது.

Source, Image Courtesy: Dinamalar

Tags:    

Similar News