இஸ்லாம் மதம் மாற்றி திருமணம் செய்த கணவர் கைவிட்டதாக பெண் புகார்!

Update: 2022-04-02 08:04 GMT

காதல் வலையில் வீழ்த்தி இஸ்லாம் மதம் மாற்றி திருமணம் செய்துவிட்டு தற்போது கணவர் மற்றும் அவரது பெற்றோர்கள் குழந்தையுடன் கைவிட்டுள்ளதாக பெண் ஒருவர் பரபரப்பான புகாரை கூறியுள்ளார். ராமநாதபுரம் மாவட்டம், மாயாகுளத்தைச் சேர்ந்தவர் ரியாஸ் அகமது. இவர் அதே பகுதியில் வசித்து வந்த இந்து பெண் கவிதா என்பவரை காதலித்து கடந்த 2021 அக்டோபர் 4ம் தேதி திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் கவிதாவை ரியாஸ் அகமது வீட்டார் இஸ்லாமிய மதத்திற்கு மாறுவதற்கு கட்டாயப்படுத்தியுள்ளனர். இதனால் வேறு வழியின்றி மதம்மாறியுள்ளார்.

இதன் பின்னர் தனது பெயரை சமீனா பர்வீன் எனவும் மாற்றியுள்ளார். இந்த தம்பதிக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இதனிடையே ரியாஸ் அகமது, சமீனா பர்வீனை (கவிதா) அவரது பெற்றோர் வீட்டில் விட்டுவிட்டு தனது பெற்றோர்களுடன் சென்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சமீனா பர்வீன் (கவிதா) தனது கணவரை தேடி மதுரைக்கு சென்றபோது அங்கு அவரது குடும்பத்தார் மிகவும் தகாத வார்த்தைகளால் திட்டி அவமானப்படுத்தியுள்ளனர்.

அது மட்டுமின்றி அவரது கணவருக்கு வேறு ஒரு பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைத்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த கவிதா என்கின்ற சமீனா பர்வீன் கீழக்கரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் ரியாஸ் அகமது மற்றும் அவரது குடும்பத்தார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source: Dinamani

Image Courtesy:The Times Of Israel

Tags:    

Similar News