ஆழித்தேர் வீதியை கலைஞர் வீதியாக மாற்ற தி.மு.க. முயற்சி: தடுத்து நிறுத்த இந்து முன்னணி புகார்!

Update: 2022-04-12 12:56 GMT

திருவாரூரில் ஆழித்தேர் ஓடும் வீதியை கலைஞர் வீதி என்று பெயர் மாற்றம் செய்வதற்கு திமுக முயற்சி செய்து வருவதாக இந்து முன்னறி புகார் அளித்துள்ளது.

திருவாரூர் நகரத்தில் ஆழித்தேர் ஓடும் வீதி என்று உள்ளது. அதனை கலைஞர் கருணாநிதி என்ற வீதியாக பெயர் மாற்றம் செய்வதற்கு திமுக முயற்சி செய்து வருகிறது. இதனை அறிந்த இந்து முன்னணி நிர்வாகிகள் உடனடியாக தடுத்து நிறுத்தக்கோரி நகராட்சி ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சியர், அறநிலையத்துறை உதவி ஆணையர் உள்ளிட்டோரிடம் புகார் அளித்துள்ளனர். இது போன்று தொடர்ந்து திமுகவினர் அத்துமீறி வருவது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Source, Image Courtesy: Twiter

Tags:    

Similar News