வயிற்று வலிக்கு சென்றவருக்கு 'எய்ட்ஸ்' என தவறான ரிப்போர்ட்: ராமநாதபுரம் அரசு மருத்துவமனையின் அவலம்!

Update: 2022-04-12 13:56 GMT

வயிற்று வலி என்று சென்றவருக்கு எய்ஸ்ட் என்று தவறான ரிப்போர்ட் கொடுத்துள்ள சம்பவம் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அரங்கேறியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், பனையூர் கிராமத்தை சேர்ந்தவர் இருளப்பன். இவர் ஒரு விவசாயி ஆவார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் உள்ளன. இரண்டு மாதங்களுக்கு முன்னர் இருளப்பன் வயிற்று வலியால் துடித்துள்ளார். இதனையடுத்து அருகே உள்ள மருத்துவமனைக்கு சென்றபோது சரியாகவில்லை என கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு ரத்த பரிசோதனை செய்ததில் எச்.ஐ.வி. இருப்பது என சான்று வந்தது. இந்த முடிவை கேட்டு இருளப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். இதனை தொடர்ந்து மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு சென்று எச்.ஐ.வி.க்கான சிகிச்சை பெற்று வருமாறு, மருத்துவர்கள் கூறியுள்ளனர். அதன்படி அங்கு சென்று எச்.ஐ.வி.க்கான சிகிச்சையை 20 நாட்கள் எடுத்துள்ளார். ஆனால் வயிற்றுவலி குணமாகாமல் அவதியுற்று வந்துள்ளார். இதனால் தற்கொலை செய்யும் முடிவை எடுத்தார். அவரை அக்கம் பக்கத்தினர் காப்பாற்றி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதன் பின்னர் எச்.ஐ.வி. இருக்கிறதா என்பதை கண்டறிய தனியார் மருத்துவமனையில் சென்று பரிசோதனை செய்துள்ளார். அப்போது நெகட்டிவ் என சான்று வந்துள்ளது. மேலும், வயிற்றுவலி வருவதற்கு பித்தப்பையில் உள்ள பிரச்சினையேதான் காரணம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். அரசு மருத்துவமனையை நம்பி சென்று எச்.ஐ.வி என சான்று வந்ததை தொடர்ந்து தனியார் மருத்துவமனை நெகட்டிவ் என சான்று வழங்கியிருப்பது நோயாளியை மனநிம்மதியில் ஆழ்த்தியுள்ளது. இது போன்ற மருத்துவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாகும்.

Source, Image Courtesy: Twiter

Tags:    

Similar News