மார்தாண்டத்தில் குடியிருந்த வீட்டை ஜெபக்கூடமாக மாற்றும் முயற்சிக்கு எதிர்ப்பு!

Update: 2022-04-13 12:14 GMT

கன்னியாகுமரி மாவட்டம், உதயமார்தாண்டம் பகுதியில் குடியிருக்கும் வீட்டை ஜெபக்கூடமாக மாற்றுவதற்கு இந்து முன்னணி எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியுள்ளது.

தமிழகத்தில் சமீபகாலமாக கிறிஸ்தவர்கள் அடாவடியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்துக்கள் இருக்கும் பகுதியில் வேண்டும் என்றே போட்டியாக ஜெபக்கூடம் அமைத்து மதமாற்றும் முயற்சியில் ஆங்காங்கே ஈடுபட்டு வருகின்றனர். இதனை இந்து முன்னணி அமைப்பு ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்தி வருவதை பார்க்க முடிகிறது.

அதே போன்ற சம்பவம் தற்போது கன்னியாகுமரி மாவட்டம், உதயமார்த்தாண்டம் பகுதியில் நடந்துள்ளது. அதாவது குடியிருக்கும் வீட்டை திடீரென்று ஜெபக்கூடமாக அமைப்பதற்கு கிறிஸ்தவர் ஒரு முடிவு செய்துள்ளார். இதனால் அக்கம், பக்கத்தில் உள்ள வீடுகளுக்கு தொந்தரவு ஏற்படும் என்று இந்து முன்னணி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. உடனடியாக ஜெபக்கூடம் அமைப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என போலீசாருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Source, Image Courtesy: Twiter

Tags:    

Similar News