கிறிஸ்தவ மதபோதகர் மதமாற்ற துண்டுப்பிரசுரம் - கையொடு பிடித்த இந்து முன்னணி நிர்வாகி!

Update: 2022-05-19 07:29 GMT

தேனி மாவட்டம், காமயகவுண்டன்பட்டியில் கிறிஸ்தவ மதபோதகர் ஒருவர் மதமாற்றம் செய்வதற்காக துண்டுப்பிரசும் விநியோகம் செய்துள்ளார். இதனை இந்து முன்னணி அமைப்பினர் தடுத்து நிறுத்தி அவர்கள் மீது காவல் நிலையத்தில் கடந்த செவ்வாய்கிழமை புகார் அளித்துள்ளனர்.

தேனி மாவட்டம், காமயகவுண்டன்பட்டியில் கிறிஸ்தவ மதபோதகர் ஒருவர் தன்னுடன் சிலரை அழைத்துக்கொண்டு துண்டுப்பிரசுரம் விநியோகம் செய்து வந்துள்ளார். இது பற்றி தகவல் கிடைத்த இந்து முன்னணி மாவட்டச் செயலாளர் எஸ்.சசிகுமார் தலைமையிலான நிர்வாகிகள் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

எப்படி இந்துக்களிடம் மதமாற்றுவதற்கு துண்டு பிரசுரம் விநியோகிக்கலாம் என்றனர். மேலும், இது குறித்து ராயப்பன்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் சார்பு ஆய்வாளர் மாயன், துண்டுப்பிரசுரங்கள், கிறிஸ்தவ மத புத்தகங்கள் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதன் பின்னர் மத பிரசாரத்தில் ஈடுபட்டவர்களை எச்சரிக்கை செய்தார். தி.மு.க. ஆட்சியில் மதமாற்றம் சர்வ சாதாரணமாக நடைபெறுவதாக இந்துக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Source, Image Courtesy: Dinamani

Tags:    

Similar News