கன்னியாகுமரியில் இஸ்லாமிய பயங்கரவாதத்தை தடுக்க தவறிய போலீஸ்: பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்!

Update: 2022-05-23 13:36 GMT

கன்னியாகுமரியில் இஸ்லாமிய பயங்கரவாதத்தை தடுக்க தவறிய காவல்துறை மற்றும் தி.மு.க. அரசை கண்டித்து மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடத்துவதாக பா.ஜ.க. அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கன்னியாகுமரியில் பா.ஜ.க. நிர்வாகிகள் சிலரை இஸ்லாமிய கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் சிலர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை பா.ஜ.க. நிர்வாகி சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்.

இது தொடர்பாக ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: கன்னியாகுமரி மாவட்ட பா.ஜ.க. சார்பில் இஸ்லாமிய பயங்கரவாதத்தை தடுக்க, தவறிய காவல்துறை மற்றும் தமிழக அரசை கண்டித்து நாளை (24.05.2022) மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக குமரி மாவட்ட பா.ஜ.க. தலைவர் சி.தர்மராஜ் அறிவித்துள்ளார். இதில் நாகர்கோயில் எம்.எல்.ஏ., எம்.ஆர்.காந்தி சிறப்புரை ஆற்றுவார் என கூறப்பட்டுள்ளது.

Source, Image Courtesy: Twiter

Tags:    

Similar News