முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கிறிஸ்தவ புத்தகத்தை பரிசளித்த புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர்!

Update: 2022-06-12 11:00 GMT

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வருகை புரிந்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு மாவட்ட ஆட்சியர் கிறிஸ்தவ புத்தகத்தை பரிசளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த 8ம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது விழா மேடையில் புதுக்கோட்டை ஆட்சியர் கவிதா ராமு முதலமைச்சருக்கு ஒரு புத்தகம் ஒன்றை பரிசளித்தது மட்டுமின்றி தமிழக முதலமைச்சருக்கு இதுவரையில் அறியப்படாத கிறிஸ்தவம் என்கின்ற புத்தகத்தை பரிசாக வழங்கியுள்ளேன் என்று அவரது பேஸ்புக் புத்தகத்தில் பதிவிட்டு அந்த புத்தகத்தின் உள்ளடக்கம் பற்றியும் பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இவரது பதிவு தற்போது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட பா.ஜ.க. தலைவர் செல்வ அழகப்பன் வெளியிட்ட பேஸ்புக் பதிவில், மத வேறுபாடு இன்றி அனைத்து மதத்தினரையும் அரவணைத்துச் செல்லும் பொறுப்பில் இருக்கும் மாவட்ட ஆட்சியர் ஒரு மதத்தை தூக்கிப் பிடிக்கின்ற வகையில் செய்திருப்பது மிகவும் கண்டனத்துக்குரியது. இது அவர் வகிக்கின்ற பொறுப்புக்கு அழகு இல்லை. எனவே அவர் அப்பொறுப்பில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Source: Dinamalar

Image Courtesy:The New Indian Express

Tags:    

Similar News