கஞ்சா விற்ற உதயநிதி நற்பணிமன்ற நகர செயலாளர் அதிரடி கைது!

Update: 2022-06-18 06:28 GMT

கஞ்சா விற்பனை செய்ததாக உதயநிதி நற்பணிமன்ற நகர செயலாளர் கஞ்சா விற்றதாக கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, பல்வாரத்தில் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைக்கப்பெற்றது. இதனையடுத்து போலீசார் அங்கு சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், பல்லாவரம், துரைப்பாக்கம் சாலையில் உள்ள முட்புதரில் மறைந்திருந்த அர்ஜூனன் என்பவரை பிடித்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கஞ்சா விற்பனை செய்வதாக தெரியவந்தது. அவர் மூலம் பல்லாவரத்தை சேர்ந்த தினேஷை தொடர்பு கொண்டு வரவழைத்தனர். அப்போது தினேஷை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அவர் உதயநிதி நற்பனிமன்றத்தின் பல்லாவரம் நகர செயலாளராக இருப்பது தெரியவந்துள்ளது. சென்னையில் ஏற்கனவே போதைப்பொருட்களின் நடமாட்டம் அதிகமாக இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது உதயநிதியின் ரசிகர் மன்றத்தை சேர்ந்த நிர்வாகி ஒருவர் கைதாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source,Image CourtesyNews 18 Tamilnadu


Tags:    

Similar News