நெல்லை: விநாயகர் சிலை உடைப்பு, தொடரும் இந்து விரோத போக்கு! இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்!

Update: 2022-07-09 01:03 GMT

நெல்லை: விநாயகர் சிலை மர்ம நபர்களால் உடைக்கப்பட்டதால், நெல்லை மேலப்பாளையம் பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.  


தமிழகத்தில் தி.மு.க ஆட்சி பொறுப்பேற்றது முதல், தமிழகம் இந்து விரோத சம்பவங்களை சந்தித்து வருகிறது. தஞ்சை கிறிஸ்துவப் பள்ளியில் கட்டாய மதமாற்ற வற்புறுத்தலால் இந்து மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம், இந்து கோயில் சொத்துக்கள், சிலைகள் சேதப்படுத்தப்படுவது மற்றும் திருடப்படுவது மற்றும்  நீண்ட நெடிய பாரம்பரியம் மிக்க கோயில்களிலுள்ள சம்பிரதாயங்களில்  அரசு தலையிடுவது, என எண்ணற்ற இந்து விரோத சம்பவங்களை தமிழகம் சந்தித்து வருகிறது.


இதன் தொடர்ச்சியாக, நெல்லை மேலப்பாளையம் பகுதியில் விநாயகர் சிலை மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளது. இச்செய்தியை அறிந்து, இந்து முன்னணி மாநில செயலாளர் குற்றாலநாதன் தலைமையில் இந்து முன்னணி அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


"தெய்வ சிலையை சேதம் செய்த மர்ம நபர்களை விரைந்து கண்டுபிடித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News