கிருஷ்ணகிரி தாலுகா அலுவலகத்தில் கட்டாய மதமாற்றம்: இந்து முன்னணி போலீசில் புகார்!

Update: 2022-07-13 12:16 GMT

கிருஷ்ணகிரி நகர இந்து முன்னணி துணைத்தலைவர் சபரிநாதன் கிருஷ்ணகிரி நகர காவல் நிலையத்தில் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது:

கிருஷ்ணகிரி தாலுகா அலுவலகம் அருகில் ஒருவர் பொதுமக்களிடம் மதமாற்றம் செய்வதற்கான நோட்டீஸை வழங்கி வந்தது மட்டுமின்றி, இந்து கடவுள்கள் எல்லாமே சாத்தான் எனவும், எனவே ஜெப கூட்டத்திற்கு வந்து ஜெபம் செய்யுங்கள் என்று கட்டாயப்படுத்தி மதமாற்றத்தில் ஈடுபட்டார்.

அந்த சமயத்தில் இந்து முன்னணி மாவட்டத் தலைவர் கலைகோபி மற்றும் நிர்வாகிகள் அந்த நபரை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், கிருஷ்ணகிரி தொன்னைகான் கொட்டாயை சேர்ந்த பால்டேனியல் 67, என்பதும் தெரியவந்தது. அவர் மிஸ்பா என்ற திருச்சபையில் ஊழியாக பணியாற்றி வருவதும் குறிப்பிடத்தக்கது. மேலும், கட்டாய கிறிஸ்தவ மதத்திற்கு மாறுவதற்கு ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Source, Image Courtesy: Dinamalar

Tags:    

Similar News