முதியவரை சரமாரியாக அடித்து தாக்கும் அரசு பேருந்து ஓட்டுனர்!

Update: 2022-07-14 14:08 GMT

சேலம்: ஓடும் பேருந்தில் ஏற முயன்று கீழே விழுந்த முதியவரை, அரசு பேருந்து ஓட்டுனர் கடுமையாக அடித்து தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தமிழகத்தில் தி.மு.க ஆட்சி பொறுப்பேற்றது முதல், பொதுமக்கள் பல்வேறு இன்னல்களில் ஆளாகின்றனர். சட்டம் -ஒழுங்கு மற்றும் நிர்வாகம் என அனைத்துத் துறைகளிலும், அரசு ஒழுங்காக இயங்க வில்லை என்று அனைத்துத் தரப்பு மக்களும் விமர்சித்து வருகின்றனர்.


இதன் வரிசையில் சேலம் பேருந்து நிலையத்தில், நடைபெற்ற சம்பவம் ஒன்று தமிழக மக்களை அதிர்ச்சி அடையவைத்துள்ளது.


சேலம் பேருந்து நிலையத்தில் இருந்து ராசிபுரம் புறப்பட முயன்ற பேருந்தில், முதியவர் ஒருவர் ஏற முயன்றுள்ளார். ஓடும் பேருந்தில் ஏற முயன்ற முதியவர் தடுக்கி கீழே விழுந்தார். உடனடியாக பேருந்து ஓட்டுனர் முரளி கிருஷ்ணன், முதியவரை தகாத வார்த்தையால் திட்டியுள்ளார்.

இதனையடுத்து இருவருக்கும் வாக்குவாதம் முற்றவே, இறுதியாக முரளிகிருஷ்ணன் முதியவரை சரமாரியாக தாக்கியுள்ளார். இக்காட்சிகள் சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது.


Full View


Tags:    

Similar News