தேசிய கீதம், தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய செஸ் ஒலிம்பியாட் போட்டி!

Update: 2022-07-28 13:25 GMT

சென்னையில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. இதற்கான தொடக்க விழா நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் இன்று நடைபெறுகிறது.

இந்த விழாவை பிரதமர் மோடி பங்கேற்று தொடங்கி வைக்கிறார். இதற்காக டெல்லியில் இருந்து சென்னைக்கு தனி விமானத்தில் வருகை புரிந்தார். இதனையடுத்து அடையாறு கடற்படை தளத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் சென்றடைந்தார். அங்கிருந்து நேரு உள்விளையாட்டு அரங்கத்திற்கு பிரதமர் மோடி கார் மூலம் சென்றடைந்தார்.

அவர் விழா மேடை ஏறியதும் அனைவரையும் பார்த்து வணக்கம் வைத்தார். அதன் பின்னர் தேசிய கீதம் மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்து ஒன்றன் பின்னாக பாடப்பட்ட பின்னர் விழா தொடங்கியது.

Tags:    

Similar News