சதுரங்கம் விளையாடிய சிவன் - பிரதமர் மோடி குறிப்பிட்ட கோயில் எங்கு உள்ளது தெரியுமா!

Update: 2022-07-29 11:07 GMT

சென்னையில் நேற்று (ஜூலை 28) சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரதமர் மோடி துவக்கி வைத்து பேசியதாவது: விளையாட்டு நம்முடைய கலாசாரத்தில் தெய்வீகமாக பார்க்கப்படுகிறது.

மேலும் தமிழகத்திற்கும் செஸ் போட்டிக்கும் நீண்ட கால தொடர்பு இருக்கிறது. தமிழகத்தில் இருக்கின்ற பல்வேறு கோயில்கள் பழமை வாய்ந்தவை ஆகும். அதில் தமிழ் கலாசாரத்தை பிரதிபலிப்பவை ஆகும்.

செஸ் விளையாட்டை நினைவுபடுத்துகின்ற வகையில் சதுரங்க வல்லபநாதர் கோயில் தமிழகத்தில் திருவாரூர் மாவட்டம், திருப்பூவனூரில் அமைந்துள்ளது. அதாவது கடவுளே செஸ் விளையாடி இருப்பதை இந்த கோயில் காட்டுகிறது. மேலும், கடவுளே இளவரசியுடன் சதுரங்க ஆட்டத்தை ஆடியுள்ளார். சதுரங்கத்துடன் வலிமையான சரித்திர தொடர்பு இருக்கிறது என்றார். தமிழகத்தில் இருப்பவர்களுக்கே சதுரங்கம் விளையாடிய சிவனுக்கு கோயில் இருக்கிறது என்பது தெரியாது. ஆனால் பிரதமர் மோடி தமிழக வரலாற்றை அனைத்தையும் நன்று அறிந்து வைத்துள்ளார் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

Source, Image Courtesy: Dinamalar

Tags:    

Similar News