கோயில் சுவரில் தி.க விளம்பரம்! களத்தில் இறங்கிய இந்து முன்னணி! அடுத்து என்ன?

Update: 2022-07-30 05:58 GMT

அரியலூர்: இந்து கோயில் சுவரில் தி.க விளம்பரம் இடம் பெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கடவுள் மறுப்பு பேசிய ஈ.வே.ரா'விற்கு, இந்து கோயில்களுக்கு எதிரோ அல்லது அருகிலோ சிலைகள் இருக்கும். அச் சிலைகளுக்கு கீழே "கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி" என்று பொறிக்கப்பட்டிருக்கும். அதே கடவுள் மறுப்பு பேசும் ஈ.வே.ரா'விற்கு, பெருமளவில்  ஏன் மசூதியின் அருகிலோ அல்லது சர்ச் வாசலிலோ சிலைகள் எழுப்பவில்லை?, என்ற கேள்வி தற்போது வரை விடை இல்லாமல் இருக்கிறது.


இதன் தொடர்ச்சியாக அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்திலுள்ள பிரசித்தி பெற்ற சிவன் கோயில் சுவரில், தி.க கொடி வரையப்பட்டு 'சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வு. மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு. நீட் எனும் கேட்டை அளிப்போம்' போன்ற வாசகங்கள் எழுதப்பட்டுள்ளது.




 

இது அக்கோயில் பக்தர்களையும் ஊர் பொது மக்களையும் மன வேதனைக்கு ஆளாக்கியது. இதனை அறிந்த இந்து முன்னணி அமைப்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். அதன் விளைவாக கோவில் சுவரில் இடம்பெற்ற தி.க விளம்பரம், முழுவதும் சுண்ணாம்பு பூசப்பட்டு அளிக்கப்பட்டது.



Hindu Munnani

 



Tags:    

Similar News