தேசியக்கொடியில் "இயேசுவே இந்தியாவை ஆசீர்வதியும்" என்று எழுதிய பள்ளி ஆசிரியர்!

Update: 2022-08-16 10:41 GMT

திருப்பூர்: சுதந்திர தினத்தின் போது, பள்ளி ஆசிரியர் ஒருவர் தேசியக் கொடியில் மதப் பிரச்சாரம் மேற்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


நாடு முழுவதும் நேற்று 75வது சுதந்திர தினம் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது. பொதுமக்கள் அனைவரும் தங்களின் இல்லங்களில் தேசியக் கொடியேற்றி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். சமூக வலைதள வாசிகளும் தங்களது சமூக வலைதள பக்கங்களின் முகப்பு படமாக தேசிய கொடியை பதிவேற்றம் செய்து மகிழ்ந்தனர். இந்நிலையில் திருப்பூரில் நடைபெற்ற ஒரு சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.


திருப்பூர் மாவட்டம், தாராபுரம் குறிஞ்சி நகர் பகுதியைச் சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியர் 'எபின்' என்பவர். நேற்று சுதந்திர தினத்தையொட்டி, தன் இல்லத்தில் தேசியக்கொடி ஏற்றி வைத்தார். அந்த  தேசியக்கொடியில் "இயேசுவே இந்தியாவை ஆசீர்வதியும்" என்று வாசகத்தை எழுதி வைத்துள்ளார். இதனை அறிந்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து காவல்துறையிடம் புகார் அளித்தனர். இதனையடுத்து எபின் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.


நாடு முழுவதும் தற்போது கிறிஸ்துவ சட்டவிரோத மதப்பிரச்சாரம் தலைவிரித்தாடும் நிலையில், தேசியக்கொடியை அவமதித்து இப்படி அப்பட்டமாக மதப்பிரச்சாரம் செய்த சம்பவம் பொதுமக்களை கடுப்பேற்றியுள்ளது .

Dinamalar

Tags:    

Similar News