கனிமொழி பங்கேற்ற கூட்டத்தில் கூட பெண் காவலரிடம் கைவரிசை காட்டிய தி.மு.க'வினர் - இதுவரை வாய்திறக்காத பெண் காவலர் கனிமொழி!

Update: 2023-01-02 07:20 GMT

தமிழக அரசு, பெண்கள் உரிமைகள் காப்பதுடன் அவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது என திமுக எம்பி கனிமொழி மேடைக்கு மேடை பேசி வருகிறார். அவர் பங்கேற்ற கூட்டத்தில், பெண் காவலரிடம், தி.மு.க.,வினர் அநாகரிகமாக நடந்த சம்பவம்அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

சென்னை, விருகம்பாக்கத்தில் தி.மு.க., சார்பில் அன்பழகன் நுாற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் நடந்தது. திமுக எம்.பி.,க்கள் கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன், விருகம்பாக்கம் எம்.எல்.ஏ., பிரபாகர ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சி இறுதிக்கட்டத்துக்கு வந்தபோது, திமுக இளைஞர் அணியைச் சேர்ந்த இருவர், பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலரிடம் அநாகரிகமாக நடந்து கொண்டனர்.

இருவரையும் போலீசார் மடக்கி பிடித்தபோது, பொதுக்கூட்டத்திற்கு வந்திருந்த திமுகவினர் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, மேடையில் இருந்த எம்.எல்.ஏ., பிரபாகர ராஜா, பிரச்னையை பெரிதாக்க வேண்டாம் எனக் கூறி சமரசம் செய்தார். போலீசிடம் அத்துமீறிய திமுக பிரமுகர்கள் இருவரையும் போலீசார் எச்சரித்து விடுவித்தனர்.

Input From: Dinamalar

Similar News