விளையாட்டு அமைச்சர் உதயநிதிக்காக வெயிலில் காய வைக்கப்பட்ட பள்ளிக்குழந்தைகள்!

Update: 2023-01-26 02:32 GMT

சென்னையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டி தொடக்க விழாவிற்கு உள்ளாட்சித் துறை அமைச்சர் உதயநிதி தாமதமாக வந்து துவக்கி வைத்தார். இதனால் மாணவர்கள் ஒரு மணி நேரம் வெயிலில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் சென்னை மாநகராட்சி இணைந்து நடத்தும் மாவட்ட அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள் துவங்கின.

காலை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தின பூங்கா விளையாட்டு மைதானத்தில் கால்பந்து, கபடி, பூப்பந்து போட்டிகளை அமைச்சர் தொடங்கி வைத்தார்.

அதேபோல், காலை 10:30 மணிக்கு தியாகராய நகர் நடேசன் பூங்கா எதிரே உள்ள கண்ணதாசன் மைதானத்தில் கூடைப்பந்து, சிலம்பம், செஸ் போட்டிகளை அவர் துவக்கி வைப்பார் என அறிவிக்கப்பட்டது.

விழாவில் பங்கேற்க, காலை, 9மணிக்கு, மாணவர்களை அழைத்து வந்து அமர வைத்தனர். ஆனால் அமைச்சர் 11:45 மணிக்கு வந்தார். அதுவரை மாணவர்கள் வெயிலில் காத்திருந்தனர்.செஸ் போட்டியை தொடங்கி வைத்த அமைச்சர் வேகமாக சென்றார். 

Input From: Dinamalar

Similar News