மிடுக்கு! முறுக்கு! கணவரை பிரிந்து வாழும் இளம்பெண் மீது வேலையை காட்டிய வி.சி.க நிர்வாகி!

Update: 2023-01-27 01:03 GMT

தென்காசி மாவட்டம்  அருணாசலபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் காசி சிவகுருநாதன். இவர் அரியநாயகிபுரம் பஞ்சாயத்து துணைத்தலைவராக உள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தென்காசி வடக்கு மாவட்ட வழக்கறிஞர் அணி மாவட்ட செயலாளராகவும் பொறுப்பில் இருந்து வருகிறார்.

இவரது கிராமத்துக்கு, பக்கத்து கிராமத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர், காசி சிவகுருநாதன் மீது புகார் தந்துள்ளார். இந்த பெண் ஏற்கனவே திருமணமானவர்.. ஆனால், தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்

புளியங்குடி மகளிர் ஸ்டேஷனில் விசாரணை நடத்தப்பட்டதாகவும், அந்த பெண் ஸ்டேஷனுக்கு செல்லும்போதெல்லாம் உதவி செய்வதாக காசி கூறி வந்துள்ளார். மேலும் தன்னை சாதி பெயரை சொல்லி திட்டியதாக சேத்திரமரம் போலீசில் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார். இப்பெண்ணுக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு தந்தாராம் காசி சிவகுருநாதன்.

வன்கொடுமை தடுப்பு சட்டம் மற்றும் பாலியல் ரீதியான துன்புறுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் காசி சிவகுருநாதன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.. ஆனால், அதற்குள் வழக்கறிஞர் தலைமறைவாகி உள்ளதாக தெரிகிறது.

Input From: Oneindia


Similar News