மனம் நொந்து போயிட்டேன்; என்ன நிம்மதியா விடுங்க - அமைச்சர் நேரு ஆட்களால் உடைந்த தி.மு.க எம்பி சிவா!

Update: 2023-03-17 01:21 GMT

திருச்சி எஸ்.பி.ஐ. காலனியில் திமுக எம்.பி. திருச்சி சிவா வீடு உள்ளது. இந்த பகுதியில் அமைக்கப்பட்ட  விளையாட்டு மைதானத்தை திறந்து வைப்பதற்காக அமைச்சர் நேரு புதன்கிழமை காலை வருகை தந்தார்.

திறப்பு விழா அழைப்பிதழ் மற்றும் பேனர்களில், திருச்சி சிவா எம்.பி. பெயர் இடம் பெறாததால் அவரது ஆதரவாளர்கள் அமைச்சர் நேருவின் காரை வழிமறித்து கருப்பு கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அமைச்சரின் ஆதரவாளர்கள்  திடீரென காரில் இருந்து இறங்கி திருச்சி சிவா வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த கார், வீட்டின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

வெளிநாடு சென்றுவிட்டு திருச்சிக்கு விமான மூலம் வந்த திருச்சி சிவா  நேருவின் ஆதரவாளர்களால் தாக்கப்பட்ட தமது வீட்டையும் வாகனத்தையும் கண்டு வேதனைப்பட்டார்.

நான் அடிப்படையில் முழுமையான, அழுத்தமான திமுக கட்சிக்காரன். தனி மனிதனை விட இயக்கம் பெரிது, கட்சி பெரியது என்று எண்ணுபவன் நான். இப்போது நடந்து இருக்கிற இந்த நிகழ்ச்சி மிகவும் மன வேதனையை ஏற்படுத்துகிறது. நான் ஊரில் இல்லாத போது என்னுடைய குடும்பத்தார் மிகவும் மன வேதனைக்கு ஆளாகி உள்ளனர்.

என் வீட்டில் பணியாற்றிய 65 வயது பெண்மணி மற்றும் எனது நண்பர்கள் வயது முதிர்ந்தவர்கள் எல்லாம் காயப்பட்டு உள்ளனர். நான் பேசுவதற்கு நிறைய உள்ளது, ஆனால் நான் இப்போது பேசக்கூடிய மன நிலையில் இல்லை.

மன சோர்வில் உள்ளேன். இந்த தாக்குதல் சம்பவம் எனக்கு பெரும் வேதனையை தந்துள்ளது என்றார். 

Input From: Dinamalar


Similar News