தங்கம் கடத்தலில் தமிழக இளைஞர்களை மூளை சலவை செய்வதா.. இந்து முன்னணி குற்றச்சாட்டு..

Update: 2023-08-30 05:10 GMT

சென்னை மற்றும் திருச்சி போன்ற விமான நிலையங்களில் இருந்து தங்கம் சட்டத்திற்கு விரோதமாக கடத்தி வருவதாக குற்றம் சாட்டப்பட்டு இருக்கிறது இது தொடர்பாக ஏராளமான வழக்குகளையும் புலனாய்வுத்துறை அடையாளம் கண்டு இருக்கிறது. ஆனால் இவற்றை செய்வதற்கு நம்முடைய தமிழக இளைஞர்களை மூளை சலவை செய்வதாக இந்து முன்னணி அமைப்பை சேர்ந்தவர்கள் குற்றம் சாட்டு இருக்கிறார்கள். இது தொடர்பாக அவர்கள் சமூக வலைத் தளங்களில் கருத்துக்களையும் பதிவிட்டு இருக்கிறார்கள்.



இந்து முன்னணி அதிகாரப்பூர்வமான சமூக வலைத்தளர் பக்கத்தில் இது பற்றி பதிவிடும் பொழுது, "திருச்சி, சென்னை விமான நிலையங்களில் வளைகுடா நாடுகளில் இருந்து கிலோ கணக்கில் தங்கம் கடத்தி வரப்படுகிறது. இந்த செயலை செய்வதற்காக இளைஞர்களையும் மாணவர்களையும் மூளைச்சலுவை செய்து அவர்களை கடத்தல் தொழிலில் ஈடுபட வைக்கின்றனர். அவர்களும் வறுமையின் காரணமாக இவர்களின் ஆசை வார்த்தைக்கு அடிபணிந்து கடத்தல் தொழில் செய்து இறுதியில் மாட்டிக் கொள்கின்றனர்.


தங்கம் கடத்தலில் தமிழகம் இரண்டாவது இடத்திலும் இருப்பது வெட்கக்கேடான செயலாகும். மத்திய அரசு இதன் பின்புலமாக இருந்து செயல்படும் கடத்தல் மாபியாக்களை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். தமிழக காவல்துறையும் இதற்கு ஒத்துழைத்து இது போன்ற சட்டவிரோத செயல்கள் செய்பவர்களை தண்டிக்க உதவிகரமாக இருக்க வேண்டும்" என்று இந்து முன்னணி வலியுறுத்துகிறது.

Input & Image courtesy: News

Tags:    

Similar News