தனி விமானம் வைத்து மாவட்டம் விட்டு மாவட்டம் பறக்கும் பெரிய இடத்து பிள்ளை ஸ்டாலின்! எளிமையான பயணம் மேற்கொள்ளும் எடப்பாடியார்!

Update: 2021-03-30 01:30 GMT

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 6-ந்தேதி நடைபெற உள்ளது. வேட்புமனுதாக்கல், தலைவர்கள் பிரசாரம் என்று தேர்தல்களம் சூடுபிடிக்கத்தொடங்கி விட்டது. தங்கள் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக கட்சித்தலைவர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள்.

தேர்தலுக்கு குறுகிய நாட்களே இருப்பதால் தமிழகம் முழுவதும் பிரசாரம் மேற்கொள்ள சாலை பயணத்தை தவிர்த்து விமானம் மூலம் ஒவ்வொரு பகுதிக்கும் சென்றுவர தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார்.

கடந்த தேர்தல்களைப்போல் இல்லாமல் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் பரப்புரை பயணத்திட்டம் இந்த தேர்தலில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

வாரத்திற்கு மூன்று நாட்கள் வட மாவட்டங்களிலும் மூன்று நாட்கள் தென் மாவட்டங்களிலும் ஒருநாள் மேற்கு மாவட்டத்திலும் இருக்கும்படி தனி விமானம் மூலம் பயணித்து புதிய யுக்தியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஸ்டாலின் ஈடுபட்டு வருகிறார்.

கடந்த 15ஆம் தேதி தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய ஸ்டாலின், இதற்காக தனி விமானம் ஒன்றை வாடகைக்கு எடுத்துள்ளார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரத்திற்கு காரிலும், பொது விமான பயணத்தையும் மேற்கொள்ளும் நிலையில், ஸ்டாலின் தனி விமானம் வைத்து மாவட்டம் விட்டு மாவட்டம் பறப்பது அவரது ஆடம்பர வாழ்க்கையை வெளிக்காட்டுகிறது.

ஸ்டாலினை போலவே மக்கள் நீதி மைய கட்சி நிறுவனர் கமல்ஹாசன் ஹெலிகாப்டர் ஒன்றினை வாடகைக்கு எடுத்து, தமிழகம் முழுக்க பிரச்சாரம் செல்ல பயன்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Similar News