தி.மு.க-வுக்கு ஓட்டு போடவில்லை என்றால் அல்லாவின் சாபம் உங்களை சும்மா விடாது - கோடம்பாக்கம் பள்ளிவாசலில் விபரீத போதனை!

Update: 2021-04-04 01:15 GMT

திமுகவுக்கு ஓட்டு போடவில்லை என்றால் அல்லாவின் சாபம் உங்களை சும்மா விடாது என கோடம்பாக்கம் பள்ளிவாசலில் விபரீத போதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது குறித்து ஆயிரம் விளக்கு தொகுதியில், மக்கள் நீதி மையம் சார்பில் போட்டியிடும் கே.எம் சரீப் வெளியிட்ட பதிவில், கோடம்பாக்கம் புலியூர் பள்ளியில் ஜும்மா தொழுக சென்றேன்.

அதன் இமாம் ஜூம்மா பிரசங்கத்தில் தி.மு.க.கூட்டணிக்கு ஓட்டுப்போடவில்லை என்றால் இறைவனின் சாபத்திற்கு ஆளாக நேரிடும் என எச்சரித்தார். தி.மு.க.விற்கு வாக்களிக்காவிட்டால் ரசூல் (ஸல்) அவர்களின் கொள்கைக்கு எதிரானதாக ஆகிவிடும் என மிரட்டினார்.

எனக்கு ஒன்றும் புரியவில்லை. நான் தி.மு.க.விற்கு எதிராக வேறு தேர்தலில் நிற்கிறேன். இந்த சாபத்திலில் இருந்து எப்படி நான் தப்பிப்பது? ஜமாத்துல் உலமா ஏதாவது தாயத்து மந்திரித்து வைத்திருக்கிறதா? என கேள்விஎழுப்பி உள்ளார்.



மத வழிபாட்டு இடத்தில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று மதத்தலைவர்கள் கட்டளையிடுவது உண்மையான 'மதநல்லிணக்க' ஆபத்து. அதிமுக கூட்டணிக்கு வாக்களிப்பது 'ஹராம்' என்று பிரச்சாரம் செய்கிறார்கள்.


இதே போல சீர்காழி அருகே தைக்கால் பெரிய பள்ளிவாசலில் இரட்டை இலைக்கு வாக்களித்தால் அவர்களின் வீட்டில் நடக்கும் நல்லது கெட்டதுக்கு யாரும் செல்லக்கூடாது என்று ஊர் மக்கள் மிரட்டப்பட்டுள்ளனர்

Similar News