திருவள்ளூரில் பரபரப்பு: குடற்புழு நீக்க மாத்திரை சாப்பிட்ட 10 அரசுப் பள்ளி மாணவர்கள் மயக்கம்!

Update: 2022-03-19 07:09 GMT

திருத்தணி அருகே சுகாதாரத்துறை சார்பில் அளிக்கப்பட்ட குடற்புழு நீக்க மாத்திரையை சாப்பிட்ட 10 மாணவர்கள் மயக்கம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Full View

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்துள்ள பொற்பாடு ஊராட்சி துவக்கப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பாக குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்பட்டது. இதனை மாணவ, மாணவிகள் வாங்கி சாப்பிட்டுள்ளனர். இதில் 8 மாணவி மற்றும் 2 மாணவர்களுக்கு மயக்கம் அடைந்து கீழே விழுந்துள்ளனர்.

இதனால் பதறிப்போன ஆசிரியர்கள் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்துள்ளனர். மயக்கம் அடைந்த சம்பவம் பற்றி கேள்விப்பட்ட பெற்றோர்கள் மருத்துவமனை முன்பாக குவிந்துள்ளனர். ஒரே பள்ளியில் 10 மாணவர்கள் மயக்கம் அடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Source, Image Courtesy: News J

Tags:    

Similar News