சூலூர்: 100 ஆண்டு பழமையான கோயில் இடிப்பு! கண்ணீர் வடித்த பக்தர்கள்!

சூலூர் அருகே புறம்போக்கு இடத்தில் கட்டப்பட்டிருந்த கோயிலை இடித்துள்ளதற்கு இந்துக்கள் கண்ணீர் வடித்த சம்பவம் அதிர்ச்சியை அளித்துள்ளது.

Update: 2021-12-18 04:48 GMT

சூலூர் அருகே புறம்போக்கு இடத்தில் கட்டப்பட்டிருந்த கோயிலை இடித்துள்ளதற்கு இந்துக்கள் கண்ணீர் வடித்த சம்பவம் அதிர்ச்சியை அளித்துள்ளது. கோவை மாவட்டம், சூலூர் அருகே உள்ள பட்டணம் பகுதி குட்டை அருகில் 100 ஆண்டுகள் பழமைவாய்ந்த வாசுதேவன், வருண பகவான் கோயில்கள் உள்ளது. சுற்றுவட்டப் பகுதியை சேர்ந்தவர்கள் கோயிலில் தினமும் வாழிபாடுகள் நடத்தியும், திருவிழாக்கள் செய்தும் வருகின்றனர்.

அது மட்டுமின்றி அப்பகுதியிலேயே மற்ற கோயில்களும் கட்டுவதற்கு பக்தர்கள் முடிவு செய்து, அதற்கான கட்டுமானப்பணிகளை செய்து வந்தனர். இதனிடையே அருகாமையில் உள்ள தோட்டத்தின் உரிமையாளர் ஒருவர் புறம்போக்கு நிலத்தில் கோயில் கட்டுவதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதனை விசாரித்த நீதிமன்றம் கோயில்களை இடிக்க உத்தரவு பிறப்பித்தது.

இதனால் ஆர்.ஐ. சிவபாலன் மற்றும் வருவாய்த்துறையினர் கோயில்களை இடித்து அகற்றுவதற்கு நேற்று (டிசம்பர் 17) வந்தனர். இதனை அறிந்த பக்தர்கள் கோயில் இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் போலீசார் உதவியுடன் வருவாய்த்துறை அதிகாரிகள் மூன்று கோயில்களையும் இடித்து விட்டனர். இதனை பார்த்து பக்தர்கள் அனைவரும் கண்ணீர்விட்டு கதறினர். கோயிலை விட்டு விடுங்கள் எனவும் கோரிக்கை வைத்தனர். ஆனால் அதிகாரிகள் செவிசாய்க்காமல் இடித்து அப்புறப்படுத்தினர். இதற்கு ஒட்டு மொத்த மக்களும் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.

Source, Image Courtesy: Dinamalar


Tags:    

Similar News