வீடியோ பேசியது மாணவியே இல்லைனு சொல்லுவிங்க போல: எஸ்.பி.க்கு கேள்வி எழுப்பிய இயக்குநர் மோகன் ஜி!

Update: 2022-01-21 04:07 GMT
வீடியோ பேசியது மாணவியே இல்லைனு சொல்லுவிங்க போல: எஸ்.பி.க்கு கேள்வி எழுப்பிய இயக்குநர் மோகன் ஜி!

அரியலூரை சேர்ந்த 12ம் வகுப்பு படித்த பள்ளி மாணவி ஒருவர் மதமாற்றம் செய்ய வற்புறுத்தியதால் பூச்சி மருந்து குடித்து உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தை தஞ்சை மாவட்ட எஸ்.பி. ரவளி பிரியா மறுப்பு தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறும்போது, மாணவி தற்கொலை செய்து கொண்டது குறித்து விசாரணை நடத்தியதில் அவர் மதமாற்றம் செய்ய வற்புறுத்தியது தெரியவில்லை என்றார். இவரது கருத்து இந்துக்கள் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. இவரது கருத்துக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் கேள்வி எழுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இயக்குநர் மோகன் ஜி, தனது ட்விட்டர் பதிவில் எஸ்.பி. ரவளி பிரியா பேசியது குறித்து ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் வீடியோல பேசியது லாவண்யாவே இல்லை போல.. என்னங்க சார் உங்க சட்டம் என குறிப்பிட்டுள்ளார்.

Source, Image Courtesy: Twiter

Tags:    

Similar News