மாரியம்மன் சிலை சேதம் : சாஹுல் ஹமீது மற்றும் முஹம்மது சாதிக் பாட்ஷா கைது

Update: 2022-02-16 08:42 GMT

திருப்பூர் மாவட்டம், காங்கயம் ஒட்டப்பாளையத்தில் மாரியம்மன் கோவில் முன்பாக மது அருந்திவிட்டு சிலையை சேதப்படுத்திய இரண்டு முஸ்லிம் வாலிபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.   

காங்கயம், ஒட்டப்பாளையத்தில் அமைந்துள்ள தனியாருக்கு சொந்தமான மாரியம்மன் கோவில் முன்பாக சாகுல் ஹமீது 27, முகமது சாதிக் பாட்ஷா 22 ஆகிய இரண்டு பேர் மது அருந்தியுள்ளனர். அப்போது இதனை கண்ட தங்கவேல் என்பவர் ஏன் இந்த சமயத்தில் உட்கார்ந்து சத்தமாக பேசுறீங்க எனக் கேட்டுள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த இரண்டு முஸ்லிம் வாலிபர்கள் கோவிலுக்கு முன்பாக இருந்த கல்லை எடுத்து மாரியம்மன் சிலை மீது வீசியுள்ளனர். இதில் சிலை பலத்த சேதமடைந்துள்ளது. இது தொடர்பாக புகார் அளித்ததின் பேரில் சாகுல் ஹமீது மற்றும் முகமது சாதிக் பாட்ஷா ஆகிய இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். திமுக அரசு பொறுப்பேற்ற பின்னர் இந்து கோவிலுக்கு எதிரான அட்டூழியங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

Source: Dinamalar

Image Courtesy: Samayam Tamil

Tags:    

Similar News