செங்கல்பட்டில் அனுமதியின்றி ஒலிபெருக்கியில் மதப்பிரச்சாரம்: காவல்துறையில் இந்து முன்னணி புகார்!

Update: 2022-04-02 10:12 GMT

செங்கல்பட்டு மாவட்டத்தில் அனுமதியின்றி ஒலிபெருக்கியை வைத்துக்கொண்டு கிறிஸ்தவர்கள் மதபிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதை இந்து முன்னணி தடுத்து நிறுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், பல்லவபுரம் பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். அங்கு வசிக்கின்ற மக்களுக்கு தொல்லை கொடுக்கும் விதமாக கிறிஸ்தவர்கள் ஒலிப்பெருக்கியை வைத்துக்கொண்டு மதபிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இதனை கவனித்த இந்து முன்னணி நிர்வாகிகள் உடனடியாக காவல்துறையில் புகார் அளித்தனர்.

புகாரை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மதபிரச்சாரம் செய்பவர்களை தடுத்து நிறுத்தினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

Source, Image Courtesy: Twiter

Tags:    

Similar News