காஞ்சிபுரம்: அரசுக்கு சொந்தமான ரூ.15 கோடி மதிப்பிலான நிலம் மீட்பு!

Update: 2022-07-24 01:28 GMT

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அருகே ரூ.15 கோடி மதிப்பிலான அரசு நிலம் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

உத்திரமேரூர் அருகே உள்ள திருப்புலிவனம் கிராமம் உள்ளது. அங்கு சுப்பையா என்ற தனிநபர் 8 ஏக்கர் பரப்பிலான நிலத்தை ஆக்கிரமித்து வைத்திருந்தார். அவருக்கு வருவாய்த்துறை மூலமாக பலமுறை நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இது அரசுக்கு சொந்தமான நிலம் எனவே காலி செய்யுங்கள் என கூறப்பட்டுள்ளது. ஆனால் அவர் காலிசெய்யவில்லை.

இதனையடுத்து வருவாய்த்துறை அதிகாரிகள் உயிர்கால அவகாசம் அளிக்கப்பட்டும் அவர் ஆக்கிரமிப்பை அகற்றாத நிலையில், வருவாய்த்துறை அதிகாரிகள் ஜே.சி.பி., இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்பை அகற்றி நிலத்தை மீட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

Source, Image Courtesy: Polimer

Tags:    

Similar News