தமிழகத்தில் 3 இடங்களுக்கு சர்வதேச அங்கீகாரம்: மத்திய அரசு அதிரடி நடவடிக்கை!

Update: 2022-07-27 10:51 GMT

தமிழகத்தில் பள்ளிக்கரணை சதுப்பு நிலம், பிச்சாவரம் அலையாத்தி காடும், கரிக்கிலி பறவைகள் சரணாலயம் உள்ளிட்ட மூன்று இடங்கள் சர்வதேச அளவிலான ராம்சார் பட்டியலில் சேர்த்திருப்பதாக மத்திய அரசு கூறியுள்ளது.

உலகளவில் சதுப்பு நிலங்களை பாதுகாப்பது பற்றிய மாநாடு கடந்த 1971ம் ஆண்டு ஈரான் நாட்டில் ராம்சார் நகரத்தில் நடைபெற்றது. அதன்படி மாநாட்டில் ஏற்பட்ட சர்வதேச ஒப்பந்தம் மற்றும் சூழலியல் பாதுகாப்பு அடிப்படையில் சதுப்பு நிலங்களை பட்டியலிட முடிவு செய்யப்பட்டது. அதன்படி இந்தியாவில் மட்டும் இதுவரையில் 49 இடங்கள் சர்வதேச பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. இதில் நாகை மாவட்டம், கோடியக்கரை பறவைகள் சரணாலயம் இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ராம்சார் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள புதிய இடங்கள் பற்றி மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் நேற்று (ஜூலை 26) வெளியிட்டார். அந்த பட்டியலில் தமிழ்நாட்டை சேர்ந்த சென்னை அடுத்துள்ள பள்ளிக்கரணை சதுப்பு நிலம், கடலூர் மாவட்டத்தில் உள்ள பிச்சாவரம் அலையாத்தி காடுகம், செங்கல்பட்டு மாவட்டம் வேடந்தாங்கல் அருகில் உள்ள கரிக்கிலி பறவைகள் சரணாலயம் ஆகியவை இடம் பெற்றுள்ளது. இதனால் சர்வதேச அளவில் ராம்சார் பட்டியலில் தமிழகத்தில் 4 இடங்கள் பிடித்து சாதனை படைத்துள்ளது. இதற்கு எல்லாம் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு காரணம் என பொதுமக்கள் கருத்துக்கள் கூறி வருகின்றனர்.

Source, Image Courtesy: Dinamalar

Tags:    

Similar News