நெரலூர், தருமபுரி வரையில் 4 வழிச்சாலை அமைப்பதால் மக்களுக்கான தரம் உயரும் - பிரதமர் மோடி

Update: 2022-05-26 14:31 GMT

தமிழகத்திற்கு ரூ.31 ஆயிரத்து 400 கோடி மதிப்பிலான 11 மக்கள் நலத் திட்டங்களை பிரதமர் மோடி அடிக்கல் நாட்டியும், சில திட்டங்களை தொடங்கியும் வைத்தார்.

அதன் பின்னர் பிரதமர் மோடி தனது உரையில் கூறியதாவது: நெரலூர், தருமபுரி வரையிலும், மீன்சுருட்டி முதல் சிதம்பரம் வரையிலான 4 வழிச்சாலை விரிவாக்கப்பணியால் மக்களுக்கான தரம் உயரும். இதனால் அவர்களுக்கு வருவாய் உயரும்.

இந்த சாலையால் விரைந்து ஒரு இடத்தில் மற்றொரு இடத்திற்கு மக்கள் எளிதாக சென்று சேர முடியும். சரக்கு வாகனங்கள் விரைந்து செல்ல இச்சாலை உதவும். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

Source, Image Courtesy: Twitter

Tags:    

Similar News